Channel Avatar

ramani chandran tamil audio novels @UC_nar7_b7kST-4hzjHKOUHg@youtube.com

6.1K subscribers - no pronouns :c

வணக்கம் நேயர்களே! உங்கள் அனைவரையும் இந்த வீடியோ மூலம்


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

ramani chandran tamil audio novels
Posted 22 hours ago

https://youtu.be/heP4qm27EF0
ஸ்ரீலக்ஷ்மியின், "நேசம் மறக்கவில்லை நெஞ்சம் " RJ கிருத்திகா ராஜின் குரலில்...

18 - 0

ramani chandran tamil audio novels
Posted 1 day ago

https://youtu.be/E4UhamGgLQ0
ரேவதி அசோக்கின், "யாவும் யாவுமே நீயானாய்" RJ கிருத்திகா ராஜின் குரலில்...
இது ஒரு இன்டர்செக்ஸ் ஆணின் பிரச்சினைகளையும், அவனின் காதலையும் பற்றி சொல்லும் கதை. ரியானுக்கு தருணிகா மேல் மலரும் காதல், அது திருமணத்தில் முடிந்தும் அவன் காதலில் தோற்கிறான். தருணிகா அவனை புரிந்துக்கொண்டாளா? இருவரும் வாழ்க்கையில் ஜெயித்தார்களா என்பது தான் மீதி கதை. இதில் ஒரு சர்ப்ரைஸ் என்னவென்றால் ரியான் தன் காதல் மனைவிக்கு அழகான ஒரு பரிசை கொடுப்பான்?இந்த உலகத்தில் எந்த கணவனாலும் கொடுக்க முடியாத பரிசு. அது என்னவென்று நீங்களே படிச்சி தெரிஞ்சிக்கங்க. (ஆனால் இது ஒரு உண்மை சம்பவம்) ஹாப்பி ரீடிங்.

21 - 0

ramani chandran tamil audio novels
Posted 2 days ago

https://youtu.be/CnrlepE7R7Y
ஆதிபிரபாவின், "தித்திக்கும் தீயே" RJ சுபீதா கண்ணனின் குரலில்...
தித்திக்கும் தீயே..... என்னுடைய ஐந்தாவது நாவல் , குடும்பமும் அதை சார்ந்த வாழ்க்கையும்.... அன்பு , பாசம், நேசம் , காதல், அனைத்தும் சேர்ந்ததுதான் இந்த கதை... குடும்பத்தை மட்டும் சார்ந்திருக்கும் நாயகியின் அன்பு சார்ந்த வாழ்க்கை நாயகன் கோபத்தை தீயாக கண்டிருந்த நாயகி ,அவனுடைய அன்பின் வீரியத்தையும் காணும் காதல் , அவனுடைய குடும்பம் அங்கு கிடைக்கும் பாசம்.... இதை சார்ந்த வாழ்க்கை.... அனைத்தும் சேர்ந்தது தான் கதை....

29 - 0

ramani chandran tamil audio novels
Posted 3 days ago

https://youtu.be/Zm-PrKcMSVA
ஸ்ரீவினிதாவின், "காந்தபுயலே உன்னை நேசிக்கிறேன்" RJ ஜானுவின், குரலில்...
ஹாய் கண்மணீஸ்....
காந்தப் புயலே உன்னை நேசிக்கிறேன்.. இது ஒரு அழுத்தமான காதல் கதை... (ஆன்ட்டி ஹீரோ)

உங்களை நிச்சயம் உணர்வுக் குவியலுக்குள் கொண்டு செல்லும்...

காதல், ஊடல், கூடல், மோகம் , போகம், சீற்றம், ட்விஸ்ட், சஸ்பென்ஸோடு கதை நகரும்...

நாயகியைத் தண்டிக்க நாயகன் எடுத்துக் கொள்ளும் உயிரியல் ஆயுதம் காதல்...

காதல் என்பது திட்டமிட்டு வருவது அல்லவே.... காதல் ஆயுதமாக மாறியதா?? இல்லை அழியாக் காவியமாக மாறியதா என கதையைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்....

28 - 1

ramani chandran tamil audio novels
Posted 4 days ago

https://youtu.be/ZMJ0gOn4GmM
லதா கணேஷின், "மனதோடு மலர்ந்தவள்" RJ சுபீதா கண்ணனின் குரலில்...
வணக்கம் நட்புறவுகளே... மனதோடு மலர்ந்தவள்... விதிவசத்தால் காதலியை இழந்த காதலன் வேறு ஒரு பெண்ணிற்கு வாழ்வில் இடம் தராமல் விரக்தியான வாழ்க்கை வாழ்பவனை வழிநடத்தும் காதலி ஆன்மா.. இவர்கள் வாழ்வில் நிகழும் மாற்றமே இந்த மனதோடு மலர்ந்தவள்..
என்றும் நட்புடன்
லதாகணேஷ்..

21 - 0

ramani chandran tamil audio novels
Posted 4 days ago

https://youtu.be/tujBc9aQcrg
ரமணிசந்திரனின், "பொழுது விடிகிற வேளையிலே"
சசிதரன் செய்த துரோகத்துக்கு வாழ்நாள் முழுதும் அவன் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று மாதுரி அவனைப் பிரிந்து வந்து விட்டாள். ஆனால் அவனிடமே சென்று பண உதவி கேட்கும் கேவலமான நிலை அல்லவா அவளுக்கு வந்து விட்டது என்ன கொடுமை ! !

69 - 1

ramani chandran tamil audio novels
Posted 5 days ago

https://youtu.be/UPDnR6YUts4
தலைப்பு: அன்பில் உருகவா வெண்பனியே..!
ஆசிரியர்: வாணி அரவிந்த்
குரல் : RJ ஜானு
காதல்னா என்ன? கல்யாணம்னா என்ன? ஒரு கல்யாணத்தா பண்ண இந்த 2024 ல நம்ம ஹீரோ எவ்வளவு போராட போறாருன்னு பாருங்க. அப்படி என்ன தான் போராட்டம்? இறுதியில் திருமணம் நடந்ததா?
ராகவ், ரதி ஜோடி இதில் வரப்போகும் இன்னொரு ஜோடி.
பாட்டி பொன்மணியின் அதிரடியான நகைச்சுவை அட்டகாசங்களுடனும், எதிர்பாராத பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுடனும், பின்னப்பட்ட அழகான ஆழமான உணர்வுகளின் சங்கமம்.

24 - 0

ramani chandran tamil audio novels
Posted 5 days ago

https://youtu.be/lJ5C7QN9LQg
ரேவதி அசோக்கின், "யாவும் யாவுமே நீயானாய்" RJ கிருத்திகா ராஜின் குரலில்...
இது ஒரு இன்டர்செக்ஸ் ஆணின் பிரச்சினைகளையும், அவனின் காதலையும் பற்றி சொல்லும் கதை. ரியானுக்கு தருணிகா மேல் மலரும் காதல், அது திருமணத்தில் முடிந்தும் அவன் காதலில் தோற்கிறான். தருணிகா அவனை புரிந்துக்கொண்டாளா? இருவரும் வாழ்க்கையில் ஜெயித்தார்களா என்பது தான் மீதி கதை. இதில் ஒரு சர்ப்ரைஸ் என்னவென்றால் ரியான் தன் காதல் மனைவிக்கு அழகான ஒரு பரிசை கொடுப்பான்?இந்த உலகத்தில் எந்த கணவனாலும் கொடுக்க முடியாத பரிசு. அது என்னவென்று நீங்களே படிச்சி தெரிஞ்சிக்கங்க. (ஆனால் இது ஒரு உண்மை சம்பவம்) ஹாப்பி ரீடிங்.

27 - 0

ramani chandran tamil audio novels
Posted 1 week ago

https://youtu.be/CaIxB-FKdH0
கதையின் தலைப்பு: என் மனதின் காவலனாய்
எழுத்து: வாகீஸ்வரி
குரல்: RJ ஸ்வீட் சுந்தரி
என் மனதின் காவலனாய்:
ஒரு கதை ஒரு நாயகனை மையமாய் வைத்து நகரும். அல்லது நாயகியை மையமாக வைத்தும் நகரலாம்.
நாயகன் நாயகி காதல் கல்யாணம் இப்படி அடுத்தடுத்து கதையானது நகர்ந்து செல்லும்.

ஆனால் இந்தக் கதையின் ஹீரோ எந்த எதிர்பார்ப்புமில்லாத ஒரு பெண்ணின் உண்மையான அன்பு மட்டுமே.

அன்பிற்கு எல்லையே இருப்பதில்லை. யார் மீது வேண்டுமானாலும் அது தோன்றலாம். அதற்கு உருவமுமில்லை

காதலர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் காதலை சொல்லிக் கொள்ளவில்லை, பரஸ்பரம் பிடித்திருக்கென்று சொல்லவும் இல்லை. ஆனால் அன்று ஒருநாள் ஈஸ்வரன் சொன்னது போல, அவனது காதலை அவளாகவே புரிந்து கொண்டாள்.

25 - 0

ramani chandran tamil audio novels
Posted 1 week ago

www.youtube.com/channel/UCqI0...
https://youtu.be/fJHq2bhpqfw
வணக்கம் அன்பான உறவுகளே. நான் உங்கள் அன்பு தோழி வாணி அரவிந்த். எனது பெயர் கலைவாணி. எனது பெயரின் பின்பாதியையும் என் அன்பு மகனின் பெயரையும் இணைத்து வாணி அரவிந்த் என்ற புனைப்பெயரில் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறேன்.

மாங்கனி நகரம் என பெருமை பெற்ற சேலம் மாவட்டம் எனது சொந்த ஊர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.

இலக்கிய வானில் சிறகடித்து பறக்கத்துடிக்கும் சிறு பறவை நான். எழுத்து எனது உயிர் மூச்சு. அழகான மென்மையான காதல், ஊடல், கூடல், நகைச்சுவை, மர்மங்கள், குடும்ப நாவல்கள் என அனைத்திலும் முத்திரை பதித்து வருகிறேன்.

எனது சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் உலகளவிலும், தேசிய அளவிலும் சில விருதுகளைப் பெற்றுள்ளது. எனது ஆய்வுக்கட்டுரைகள் செம்மொழி ஆய்விதழிலும், பன்னாட்டு இதழிலும் வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மொட்டாக இருந்த எனது எண்ணங்களை எழுத்துகளாக மலர செய்து மணம் பரப்பிய பெருமை அன்பான வாசகர்களாகிய உங்களைத் தான் சேரும். வாசகர்கள் இல்லாமல் நான் இல்லை.

எனது நாவல்கள் அருணோதயம் பதிப்பகத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது. பதிப்பகத்தாருக்கும் அருணாசலம் ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நம்ம சேனல்ல தொடர்ந்து அதிரடியாக பல காதல் கதைகள், குடும்ப நாவல்கள், நகைச்சுவை, ரொமான்ஸ்னு வரப்போகுது நட்புக்களே. எப்போதும் போல உங்கள் அன்பையும், ஆதரவையும் தாராளமா அள்ளிக் கொடுங்க மக்களே.

என்னோட ஆடியோ நாவல் தொடர்ந்து உங்களுக்கு கிடைக்க சேனல லைக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க. சப்ஸ்கிரைப் பண்ணுங்க.

நம்ம சேனல்ல முதல் நாவலா " அன்பில் உருகவா வெண்பனியே..!" அருமையான ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய திருப்பங்கள் நிறைந்த காதல் கதை வரப்போகுது மக்களே. கேட்கத் தயாரா இருங்க செல்லம்ஸ்.

அன்புடன்
உங்கள் வாணி அரவிந்த்

23 - 1