வள்ளல் பெருமானின் இரு கண்கள் -
திருவாசகமும் திருமந்திரமும்
48. திருவாசகமும் திருமந்திரமும்
சாத்திரங்களில் சிறந்தது திருமந்திரம் – இது மொத்தம் எண்ணாயிரம் ; தோத்திரங்களில் சிறந்தது திருவாசகம் – இவற்றை ஊன்றிப் பார்க்கவும்
வள்ளலின் பேச்சை எத்தனை சன்மார்க்கத்தவர் பின்பற்றினர் ??
ஏன் இந்த 2 நூல்களை ஓதவில்லை ?? ஏன் வள்ளல் பேச்சை தலையில் வைத்து கேட்கவில்லை ? ஏன் இதை ஒதுக்கினர் ??ஜீவகாருண்ணியத்தை பின்பற்றுகின்றோம் என்று சோறு மட்டும் போடத் தெரிகின்றது – ஆனால் இந்த ரெண்டு நூல்களை ஊன்றி ஆய்ந்து , சாகாதிருப்பதுக்கு வழி தெரிந்து கொள்ளத் தெரியவில்லை – படிப்பதில் ஆர்வமில்லை – ஏனெனில் இது சமயம் சார்ந்தவை – எனவே ஒதுக்கிறீர்களோ ??
இல்லை – சாதனம் எல்லாம் செய்ய சோம்பேறித்தனமா??
முதல் 5 திருமுறைகளை யார் ஒதுக்கச் சொன்னது ?? வள்ளல் சொன்னாரா??
இதைச் செய்தவர்கள் இந்த ரெண்டு நூல்களையும் ஓதாமல் இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை தானே ??
வள்ளல் பெருமானுக்குத் தெரியாதது – இது சமயம் சார்ந்தவை என்பது இவர்களுக்கு தெரிந்துவிட்டதா??
நல்ல கூத்து – நல்ல வேடிக்கை – சன்மார்க்கத்துக்கு வந்த சோதனை