Channel Avatar

Agamudayar Otrumai @UCI2KppF2iePnTNphjk6I78w@youtube.com

15K subscribers - no pronouns :c

#agamudayar #agambadi #agamudaiyar agambadi servai,mudali


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Agamudayar Otrumai
Posted 4 weeks ago

அதியமான் அரசர்களின் எல்லைப் புறத்தை படையெடுப்பாளர்களிடமிருந்து காத்து நின்ற அரும்பாக் கிழான் மலையன் என்கிற அகம்படியர் -கல்வெட்டு குறிப்பு
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்.

www.facebook.com/share/p/1Fbf1923TZ/

10 - 0

Agamudayar Otrumai
Posted 4 weeks ago

அவணியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த அகமுடையார் சமுதாயத்தவர்
-----------------------
நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு பந்தயத்தில் அதிக காளைகள் பிடித்து முதல் இடத்தைப் பெற்ற திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவர் மூன்றாவது இடத்தைப் பிடித்த திரு முரளிதரன் திருப்புவனம் கோட்டையைச் சேர்ந்த அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

அவர்கள் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

அதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் நிறைய மாடுகளை பிடித்துக் கொண்டிருந்த வேளையில் படுகாயமடைந்து இறந்துபோன தம்பி நவீன் அவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதிஉதவி அளிக்க வேண்டும்.

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.

5000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.

வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 7200507629

வெப்சைட்: agamudayarmatri.com

அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
play.google.com/store/apps/details?id=com.agamuday…

கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
#அகமுடையர்
#agamudayar
#agamudaiyar
#jallikattu
#avaniyapuram
#avaniyapuramjallikattu
#ஜல்லிக்கட்டு
#சல்லிக்கட்டு
#அவனியாபுரம்
#அவணியாபுரம்

15 - 1

Agamudayar Otrumai
Posted 4 weeks ago

பண் பாடும் பாணர் வேறு!
பாணர் எனும் வில்லவர் ஆகிய வாணர் குடிகள் வேறு வேறு!

பண் என்பது தூய தமிழ் பெயர்! இது தமிழ்குடிகளை குறிக்க தமிழர் வழங்கிய பெயர்!

பானர் அல்லது பாணம் என்பது வில்லை குறிக்ககூடிய சமஸ்கிருத பெயர்!

வில்லவர் எனும் வில்லை குலக்குறியீடாக கொண்ட குடிகளை தனு அல்லது தனுசு எனும் வில்லவர் என்றும் பாணர் எனும் வில்லவர் என்ற சமஸ்கிருத பெயரிட்டு ஆரியர்கள் அழைத்தனர் . தனு எனும் இக்குலத்தவர்கள் ஆரியர்களுக்கு எதிரிகள் என்பதால் இவர்களை தானவர் எனும் அசுர மரபுடையவர்களாக வேத இலக்கியங்கள்,புராணங்கள் சொல்கின்றன. பாணர்,தானவர் என்ற பெயர்கள் ஆரியர்கள் சிந்து சமவெளியின் பூர்வகுடிமக்களை குறிக்க ஆரியர்கள் வழங்கிய பெயர்களாகும்.

இவர்கள் குடியிலிருந்தே வாணர்,அதியர்,சேரர்,சோழர் எனும் பெரும் அரசமரபுகள் தோன்றின. இந்த அரசமரபுகள் அகமுடையார் என்று இன்று அழைக்கப்படும் குடியினர்.

இதற்கு 3000 ஆண்டுகள் முன்பிரிந்து இன்று வரை தொடர்ச்சியான ஆதாரங்கள் உள்ளன (எல்லாவற்றையும் தொகுத்து விரைவில் பல பாகங்களாக ) இலவச மின் நூல்கள் வெளியிட உள்ளோம்(அகமுடையார் சமுதாயத்தின் ஆதரவை பொறுத்து இதை செய்வோம்)

ஆகவே
பண் பாடும் பாணர் ,பாடுநர் ,கூத்தர் என்பவர்கள் வேறு!
பாணர் அல்லது வாணர் எனும் வில்லவர் குடிகள் வேறு ! வேறு!

#பாணர்
#வாணர்

17 - 3

Agamudayar Otrumai
Posted 1 month ago

திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பாக இன்று
R.k பேட்டை ஒன்றியத்தில்
ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் அறிவிப்பு வழங்கி
அத்துடன் நிகழ்ச்சியில் சங்கத்தின் கட்டமைப்புகளை பற்றி ஆலோசிக்கப்பட்டது,


2025 ஆம் ஆண்டு நாள் காட்டி காலண்டர் வழங்கப்பட்டது

நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.




சொல்லவே தேவையில்லை ஆனால் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
இப்போது மட்டுமல்ல எப்போதும் போல திருவள்ளூர் அகமுடையார் சங்கம் தலைவர்,செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மிக அருமையாக நிகழ்ச்சியை அருமையாக ஏற்பாடு செய்திருந்தது தெரிகின்றது. மிகவும் அருமை!



விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
5000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.

வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 7200507629



வெப்சைட்: agamudayarmatri.com



அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
play.google.com/store/apps/details?id=com.agamuday…





கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.



#maruthu
#marudhu
#marudu
#marudhupandiyar
#marudhupandiar
#marudupandiar
#marudupandiyar
#maruthupandiyar
#மருது
#மருதுபாண்டியர்
#மாமன்னர்
#மாமன்னர்கள்
#அகமுடையார்
#அகமுடையர்
#agamudayar
#agamudaiyar
#திருவள்ளூர்
#பூண்டி
#திருவள்ளூர்அகமுடையார்
#திருவள்ளூர்_அகமுடையார்
#திருத்தணி
#திருத்தணிஅகமுடையார்
#திருத்தணி_அகமுடையார்

25 - 0

Agamudayar Otrumai
Posted 1 month ago

வரலாற்றுத் தரவுகளில் அகம்படியர்கள் – ஒவ்வொரு அகமுடையார் சமுதாயத்தினரின் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் தற்போது விற்பனையில் தொடர்புக்கு: 7200507629
-----------------------
இன்று அகமுடையார் என்று அறியப்படும் சாதியினரின் முன்னர் பெயரான அகம்படியர் குறித்து கல்வெட்டுக்கள்,செப்பேடுகள்,இலக்கியங்கள்,அரசு ஆவணங்கள், முன்னோர்களின் வழி தகவல்கள் போன்றவற்றை தொகுத்து வெளிவந்துள்ள நூல்:


ஒவ்வொரு அகமுடையார் சமுதாயத்தினரின் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்
இந்நூலினை நூலாசிரியரிடமிருந்து பெற்று அகமுடையார் ஒற்றுமை தளம் தற்போது விற்பனை செய்து வருகிறது.


ஓர் நூல் விலை: ரூ370
கூரியர் சார்ஜ்: ரூ50
மொத்தம் ரூ420.

நூலை பெற பணம் அனுப்ப வேண்டிய ஜிபே எண்: 7200507629



குறிப்பு: 10 நூல்களுக்கு மேல் வாங்குவர்களுக்கு புத்தக விலையில் தள்ளுபடி வழங்கப்படும்!
பணம் செழுத்தியவர்களுக்கு அவர்கள் முகவரிக்கு கூரியரில் நூல் அனுப்பப்படும்.


ஏற்கனவே விருப்பம் அனுப்பியவர்களை மீண்டும் தொடர்புகொள்வோம் அவர்கள் நூலுக்கு பணம் செழுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு நூல் அனுப்பப்படும்.


நமக்கும் சரி வரும் சந்ததியினரும் சரி அறிந்து கொள்ளவேண்டிய அரிய கருத்துக்கள் அடங்கிய நூல் .100 புத்தகங்களை தேடி வாசிப்பதும் இந்நூல் ஒன்றை வாசிப்பதும் ஒன்றுதான்.


இது வெறும் அறிவை வளர்க்கும் நூல் மட்டுமன்று!சமுதாயம் குறித்து பெரும் முயற்சியில் தகவல்களை திரட்டி நூலாக்கி இருக்கும் நூலாசிரியரை பாராட்டும் முகமாக நமது சமுதாயத்தவரின் முயற்சியை ஊக்குவிக்கும் செயல் என்பதையும் மறக்க வேண்டாம்.


நூல் வாங்குவர்களில் விருப்பம் தெரிவிப்பவர்கள் தகவலை மட்டும் கமேண்டில் தகவல் வழங்குகிறோம்.


நூல் அட்டவணை

-------------------------------------------
அகம்படியர். அகமுடையார் பெயர் வடிவங்கள்
அகம்படியர் விளக்கம்
உட்பிரிவுகள் மற்றும் பட்டங்கள்
அரசமரபினர்கள்
சேரநாட்டில் இலங்கையில் உள்ளவர்கள்
கல்வெட்டு குறிப்புகள்
குலத்தெய்வங்கள்,பழக்க வழக்கங்கள்,மற்ற சமூகங்களுடனான இணக்கம்,சமுதாயம் தொடர்பான என நூற்றுக்கணக்கான நூல்களில் அகமுடையார் சமுதாயம் தொடர்பாக வெளிவந்த குறிப்புகளை தொகுத்தும் ,சமுதாய முன்னோர்களின் வாயிலாக அறியப்பெற்ற கருத்துக்களை கட்டுரையாக தொகுத்தும் வெளிவந்த அகமுடையார் சமுதாயத்தின் என்சைக்கிளோ பிடியா நூல்.

13 - 0

Agamudayar Otrumai
Posted 1 month ago

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் தொகுதியில் உள்ள வேப்பங்கனேரி🔥🔥🔥

புகைப்பட உதவி: மருது சேனை இராணிப்பேட்டை மாவட்டம்-பேஸ்புக் பக்கம்

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.

5000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.

வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 7200507629

வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
play.google.com/store/apps/details?id=com.agamuday…

கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.

api.whatsapp.com/send?phone=917200507629


thirupattur maruthu pandiyar family celebrates periya maruthu pandiyar birthday at vellore district Veppanganeri Village

#maruthu
#marudhu
#marudu
#marudhupandiyar
#marudhupandiar
#marudupandiar
#marudupandiyar
#maruthupandiyar
#மருது
#மருதுபாண்டியர்
#மாமன்னர்
#மாமன்னர்கள்
#velloreagamudayar
#vellore_agamudayar
#வேலூர்
#வேலூர்அகமுடையார்
#வேலூர்_அகமுடையார்

25 - 0

Agamudayar Otrumai
Posted 4 months ago

கண்டி அரசை உருவாக்கியவர்கள்,கண்டி அரசர்கள் அகம்படியர்களே( இன்றைய அகமுடையார் சாதியினரே)
-----------------------
கண்டி அரசர்கள் அகம்படியர்கள் என்பதை மடவெளை கல்வெட்டும், சிங்கள இலக்கியங்களும் எடுத்துக்காட்டுவதை சோழர்கள் அகம்படியர்கள் என்பது குறித்து அகமுடையார் ஒற்றுமை சேனலில் வெளியிட்ட காணொளியில் விளக்கியிருந்தோம். இந்நிலையில் அபனா என்கிற அகம்படியர் இனத்தவனே கண்டி மற்றும் மத்திய நாட்டின் அரசனாக இருந்தான் என்று சிங்கள நூலும் குறிப்பிடுகின்றது.

අගම්පඩි නිලධාරීන් දහ දෙනෙක් ගැන ද රජතුමාට විරුද්ධ ව කැරලි ගැසූ ජොතිය සිටු වරයා ගැන ද උඩ රට පසු කාලයේ දී රජ වූ ඈපා ගැන ද සඳහන් කර ඇත

There are mentions of ten Agampadi officers, of Jothiya Situ, who rebelled against the king, and of Appa, who later became king of the upper kingdom(Kandy and Kampola)

ஆதார நூல்: Kōṭṭē yugaya
dēśapālana, samāja, hā saṃskr̥tika pasubima
பக்கம் எண் : 26
நூல் ஆசியர்: Es. Ayi Gamagē
நூல் வெளியான ஆண்டு: 2007


இந்த புத்தகத்தின் குறிப்பை நேரில் பார்த்து தகவலை உறுதி செய்ய விரும்புவோருக்கான லிங்க்:
www.google.co.in/books/edition/K%C5%8D%E1%B9%AD%E1…


சோழர் அகமுடையார் என்பது குறித்து அகமுடையார் ஒற்றுமை யூடில் சேனலில் வெளியிட்ட காணொளி லிங்க்:
https://www.youtube.com/watch?v=-xHMJ...

8 - 0

Agamudayar Otrumai
Posted 4 months ago

வரலாறு மட்டுமல்ல வாழும் தலைமுறையும் பேசும் ஆதாரம்- சூரிய குலத்தவரான அகம்படியர்(இலங்கை பலபிட்டியா ஆதாரம்)
----------
பேஸ்புக்கில் විරුවන්ගේ නිජබිම බලපිටිය என்ற பெயர் சிங்கள பெயர் கொண்ட Balapitiya, the homeland of heroes அதாவது ஆங்கிலத்தில் Balapitiya, the homeland of heroes என்ற பேஸ்புக் பக்கம் இயங்கி வருகிறது. அந்த பேஸ்புக் பக்கத்தில் 2019ம் வருடம் வெளியிட்ட காலை வணக்கம் பதிவில்
கீழ்கண்டவாறு சிங்கள மொழியில் குறிப்பிடுகிறார்

"සුභ උදෑසනක් බලපිටියේ බුාහ්මන වංශිකයින් 🚼 හට සහ සූර්ය වංශිකයින් (අගම්පඩි) 🛐 හට සහ ලංකාව වාගේම ලෝකය පුරා විසිරිලා ඉන්න අපේ අයට 🙏"

அதாவது (தமிழில்)
"பலப்பிட்டி 🚼 மற்றும் சூரிய குலத்தவர் (அகம்படி) 🛐 பிராமண குலத்தினருக்கும், இலங்கை போன்று உலகம் முழுவதும் பரந்து வாழும் நமக்கும் காலை வணக்கம் 🙏"

என்று குறிப்பிடுகிறார். பலப்பிட்டி பகுதியை சேர்ந்த சிங்களரான அவர் பலபிட்டி பகுதியின் குடிகளான பிராமணரையும் ,அகம்படியர் சாதியினருக்கும் காலை வணக்கத்தை தெரிவிக்கின்றார். அதில் பிராமணரை குறிப்பிட்டுவிட்டு சூரிய குலத்தவர் என்று அகம்படியர் சாதியினரை குறிப்பிடுகிறார்.

இது பலபிட்டி பகுதியில் சிங்களராக இன்று வாழ்ந்து வரும் அகம்படியர் சாதியினர் இன்றும் சூரிய குலத்தவர் என்பதை பின்பற்றி வருகின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் நடைமுறை சான்றாக விளங்கி வருகிறது.



மேலதிக தகவல்கள்
பலபிட்டியா என்பது இலங்கையின் தென்பகுதியில் கடற்கரையோரம் அமைந்துள்ள நகராகும் .

இலங்கையின் கடற்கரை பிரதேசமான பலபிட்டியா பகுதியில் குடியேறிய அகம்படியர்கள் சோழர் பயன்படுத்திய அதே கொடியின் நிறமாக சிவப்பு ,மஞ்சளையும் சூரிய அடையாளத்தை தங்கள் கொடியில் நூற்றாண்டுகளாக கொண்டிருந்தனர் . பலபிட்டியா அகம்படியர்களின் பல நூற்றாண்டு முன்பிரிந்து பயன்படுத்தும் கொடியின் படத்தை ஏற்கனவே பதிவிட்டுள்ளோம் (இப்பதிவிலும் பார்க்க இணைப்பு : 3 )



அதுமட்டுமல்ல இராவணன் அகம்படியர் முன்னோன் என்றும் இந்த அகம்படியர்கள் பலபிட்டியா பகுதியில் குடியேறியது குறித்தும் சிங்கள மந்திரி சொன்ன கருத்துக்கள் தமிழ் இதழான நக்கீரனில் வெளியானது பற்றியும் ஏற்கனவே பதிவிட்டிருந்தோம்.




பலபிட்டி பகுதியில் வாழும் அகம்படியர்கள் ,தமிழ்நாட்டில் இருந்து சென்று இலங்கை படையில் சிங்கள அரசனிடம் பணியாற்றிய படைவீரர்கள் ஆவர். அவர்கள் சாலகமா எனும் சிங்கள சாதி பிரிவினரை சேர்ந்த பெண்களை மணந்து கொண்டு ஹேவபணே எனும் சாதியினராக மாறி உள்ளனர். இந்த சாலகமா சாதியின் உட்பிரிவாகிய ஹேவபணே எனும் சாதியினர் சத்திரிய சாதியினர் என்று குறிப்பிடப்படுகின்றனர். அகம்படியர் ஆண்களுக்கு பிறந்து சாலகமா சாதியின் உட்பிரிவாக உள்ள ஹெவபணே சாதியை தவிர்த்து சாலகமாவின் மற்ற உட்பிரிவுகள் சத்திரிய சாதியாக குறிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது(இதையும் ஏற்கனவே ஆதாங்களோடு பதிவிட்டுள்ளோம்)



பதிவு விளக்கம் ( இதை ஆதாரமாக கொள்ளலாமா?)
-------------------------------------------------------------------

கல்வெட்டு போன்ற முதன்மை வரலாற்று ஆதாரங்கள் தான் வரலாற்றுக்கு மிக முக்கியமானவை .வரலாற்று உண்மையை பேசும் போது இது போன்ற மூல ஆதாரங்கள் தான் முக்கியமானவை,நம்பத்தகுந்தவை.

அகமுடையார்கள் சூரிய குலத்தவர் என்பதற்கு கல்வெட்டு பல்வேறு வரலாற்று ஆதாரங்களை முன்னரே நமது அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்திலும், யூடிப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளோம்.



ஆனால் இன்று பார்க்க இருப்பது வரலாற்று ஆதாரம் அல்ல , இன்றும் நடைமுறையில் இருக்கும் ஓர் வழக்கு(பழக்க வழக்கத்தை பற்றி) .அது வருவது இலங்கையில் இருந்து ஆகும்.

சோழர்கள் அகம்படியர்கள் என்பதற்கும் அகம்படியர்கள் சூரிய குலத்தவர் என்பதற்கும் நிறைய வரலாற்று ஆதாரங்களை ஏற்கனவே பதிவிட்டுள்ளோம்.


ஆனால் எப்போதும் வரலாற்று ஆதாரங்களையே பார்த்து வருகிறோம் .இருந்தும் கூட சிலருக்கு சந்தேகம் வரலாம் . என்னதான் வரலாற்று ஆதாரங்களை எடுத்துக்காட்டி வரலாற்று உண்மைகளை பேசினாலும் இன்னும் கூட சிலருக்கு சந்தேகம் வரலாம்.



இவர்கள் சொல்வது உண்மை தானா? இவர்கள் சொல்லும் வரலாற்றில் உண்மையில் குறிப்பிடப்படுவர்கள் நாம் தானா என்று? அப்படிப்பட்ட சந்தேகங்களை தீர்க்க, வரலாற்றுக்கும் நமக்கும் உள்ள இடைவெளியை நிரப்புவது தான் இதுபோன்ற நடைமுறையில் புழங்கும் ஆதாரங்கள் ஆகும்.




அதில் இலங்கைக்கு சென்ற அகம்படியர்கள் குறிப்பாக கம்பளை அரசை ஆட்சி செய்து பின்னாளில் கண்டி அரசை உருவாக்கிய அகம்படியர்களும் தங்களை சூரிய குலத்தவர் என்று பதிவு செய்த சிங்கள வரலாற்று ஆதாரங்களை சோழர் அகம்படியர் என்ற காணொளியில் பார்த்தோம். பார்க்காதவர்கள் நமது சோழர் அகம்படியர் எனும் காணொளியை பார்க்கவும் (லிங்க் கீழே)
https://www.youtube.com/watch?v=-xHMJ...




பலபிட்டியா (பலபிட்டி ) பகுதியில் அகம்படியர்கள் குடியேறிய செய்தி குறித்து சிங்களவர்கள் எழுதியுள்ளனர் அதை பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம்.

வேண்டுகோள்:


வருடக்கணக்கான தேடலிலும்,உழைப்பிலும் அகமுடையார் வரலாற்றை தேடிக் கொணர்ந்து வெளியிடுகிறோம் இதனை உணர்ந்து இச்செய்தியை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


மேலதிக இணைப்புகள்
-----------------
Balapitiya, the homeland of heroes பக்கத்தில் சிங்களர் , சூரிய குலத்தவர்(அகம்படியர் ) என்று போட்ட பதிவின் லிங்க்(கீழே)
www.facebook.com/share/p/3gqUm2S1CBvUeKA3/



Google Translate சென்று இப்பதிவை உங்களுக்கு தெரிந்த மொழியில் மொழி மாற்றம் செய்து சிங்களத்தில் அவர்கள் எழுதியுள்ள கருத்தை பார்க்க முடியும்.




சோழர்,கண்டி,கம்பளை என அகம்படியர்களின் சிவப்பு மஞ்சள் கொடிகள் பற்றி ஏற்கனவே பதிவிட்ட லிங்க்:(கீழே)
www.facebook.com/100063919813164/posts/49478240599…



பலபிட்டியா பகுதி அகமுடையார் சாதியினர் குடியேறிய பகுதி என்பது குறித்து சிங்கள மந்திரி சொன்ன கருத்துக்கள் தமிழ் இதழான நக்கீரனில் வெளியானது பற்றிய பதிவு லிங்க்(கீழே)
www.facebook.com/100063919813164/posts/97187767161…

22 - 0

Agamudayar Otrumai
Posted 4 months ago

சிவகங்கை பேருந்து நிலையம் முன்பு மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலை- சிவகங்கை சேர்மன் கடிதம்
-----------------------
சிவகங்கையில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் சிலை வருவது உறுதியான நிலையில் அது எங்கு அமையப்போகிறதோ ,ஒருவேளை சிவகங்கை நகருக்கு வெளியில் அமைந்து விடுமோ என்ற கவலையிலும் ஆதங்கத்திலும் அகமுடையார் சமுதாயத்தினர் இருக்கும் இந்நிலையில்

சிவகங்கை நகர சேர்மனும் நமது உறவுமான திரு.துரை ஆனந்த் அவர்கள் சிவகங்கை சிவகங்கை நகரின் பேருந்து நிலையத்தின் முன்புறம் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலை நிறுவ அரசுக்கு பரிந்துரைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு(கலெக்டருக்கு ) கடிதம் எழுதியுள்ளார்.
அகமுடையார் சமுதாயத்தின் சார்பாக நன்றிகளும் .


அ கோரிக்கையின் படியும் சிவகங்கை நகர பேருந்து நிலையத்தின் முன்புறம் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் சிலை நிறுவி உலகம் முழுவதும் பரவி வாழும் கோடிக்கணக்கான அகமுடையார்களின் ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றுமாறு தமிழக முதல்வரை அகமுடையார் சமுதாயத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.

3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 72005 07629
வெப்சைட்: agamudayarmatri.com

அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
play.google.com/store/apps/details?id=com.agamuday…


கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
api.whatsapp.com/send?phone=917200507629


chairman durai ananth letter to collector of sivagangai to suggesting the bus stand for maruthu pandiyar statue in sivagangai

32 - 1

Agamudayar Otrumai
Posted 4 months ago

தீபாவளி பற்றி தெரிந்து கொள்க: நரகாசுரன் என்பவர் அகமுடையார் சாதியின் முன்னவரான தானவ குல அசுர அரசரான இரண்யகசிபுவின் மகனாவார் . சகோதரனான தைத்ய அல்லது தானவ குல நரகாசூரனை ஆரியர் கொன்ற நாளே தீபாவளி ஆகும்.

முன்னோர்கள் இறந்த நாள் என்பதாலேயே அந்த நாளில் தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோம் மேலும் எண்ணைய் வைத்து குளிக்கின்றோம்.



பின்னாளில் இதை ஆரியர்கள் கொண்டாட்டம் மிக்க நாளாக மாற்றினர். அகமுடையார்களின் முன்னோனாகிய நரகாசூரனை இந்த தீபாவளி நாளில் நினைவுகூர்வோம். தீபாவளி அமாவசையை ஒட்டி வருவதும் இதை குறிப்பதாகும்.





மேலதிக சிறுதகவல்கள்: நரகாசுரனின் தந்தை இரண்யாட்சன் தானவ குலத்து அரசன் ஆவார் , பாதாள உலகத்தை ஆள்பவன், புகழ்பெற்ற மற்றோரு அசுரனான இரணியனின் அண்ணன் ஆவார்.



மகாபாரதம்,இராமாயணம் மற்றும் பல புராண நூல்களில் ஆரியர்களின் எதிரிகளாக வர்ணிக்கப்படும் இந்தியாவின் பூர்வ குடிகளான தானவ குலத்தவர் 3000 வருடங்களுக்கு முன்மட்டுமல்ல 2000 ம் வருடம், 1000ம் வருடம்(சோழர்,பாண்டியர் காலத்து) கல்வெட்டுக்களிலும் ,100 வருடம் முன்பான ஆங்கிலேயரின் ஆவணங்களிலும் குறிக்கப்படுகின்றனர்.

இன்றும் இதே தானவ குலத்தவர் பெயரில் தமிழ்நாட்டின் அறந்தாங்கி பகுதியில் தானவநாடு என்ற பகுதி வழங்கி வருகிறது . சோழர் ,பாண்டியர் கல்வெட்டுக்களின் தானவதரையர் (தானவ குலத்து அரசர்கள்) என்று குறிப்பிடப்படுவர்கள் பின்னாட்களில் ஜமீன்களாக மாறி 70 வருடம் முன்பு வரை இப்பகுதியை ஆட்சி புரிந்துள்ளனர். இவர்கள் சேந்தங்குடி ஜமீன் என்ற பெயரில் அறியப்படுகின்றனர் அவர்கள் இன்றைய அகமுடையார் சாதியினர் ஆவர்.




மகாபாரதம்,இராமாயணம் மற்றும் பல புராண நூல்களில் ஆரியர்களின் எதிரிகளாக வர்ணிக்கப்படும் இந்தியாவின் பூர்வ குடிகளான தானவ குலத்தவர் 3000 வருடங்களுக்கு முன்மட்டுமல்ல 2000 ம் வருடம், 1000ம் வருடம்(சோழர்,பாண்டியர் காலத்து) கல்வெட்டுக்களிலும் ,100 வருடம் முன்பான ஆங்கிலேயரின் ஆவணங்களிலும் குறிக்கப்படுகின்றனர்.

இன்றும் இதே தானவ குலத்தவர் பெயரில் தமிழ்நாட்டின் அறந்தாங்கி பகுதியில் தானவநாடு என்ற பகுதி வழங்கி வருகிறது . சோழர் ,பாண்டியர் கல்வெட்டுக்களின் தானவதரையர் (தானவ குலத்து அரசர்கள்) என்று குறிப்பிடப்படுவர்கள் பின்னாட்களில் ஜமீன்களாக மாறி 70 வருடம் முன்பு வரை இப்பகுதியை ஆட்சி புரிந்துள்ளனர். இவர்கள் சேந்தங்குடி ஜமீன் என்ற பெயரில் அறியப்படுகின்றனர் அவர்கள் இன்றைய அகமுடையார் சாதியினர் ஆவர்.


தானநாட்டு சேந்தங்குடி ஜமீன் அகமுடையார் சாதியினர் என்பதை கீழ்கண்ட ஆதாரத்தில் பார்க்கலாம்.
www.agamudayarotrumai.com/19680/


அகமுடையார்களின் பெரும்பாலான குலதெய்வங்கள் இருளை அல்லது அசுரர் வழியினரை குறிப்பதாகும் இருளாயி,இருளப்பன்,கருப்பசாமி,சூராயி, ராக்காயி போன்றவர்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

16 - 0