18-வது வேதாத்திரிய வேள்வி தினம்

1 videos • 718 views • by SKY Yoga TV by Vethathiri Maharishi உலக சமுதாய சேவா சங்கத்தின் நிறுவனர் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் மகாசமாதி அடைந்து பதினெட்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. உலக சமுதாய சேவா சங்கம் தனிமனித அமைதி, குடும்ப அமைதி, உலக அமைதி என்ற நோக்கத்தை செயல் திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அருள்தந்தை அவர்கள் மனிதகுலம் முழுமை நல வாழ்வு பெற மனவளக்கலை யோகாவை (SKY YOGA) கல்வியாகவும் பயிற்சிகளாகவும் வகுத்துக் கொடுத்துள்ளார்கள். உடல், உயிர், மனம், அறிவு மற்றும் சமுதாய நலத்திற்கான இக்கல்வியை ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மக்கள் பயின்று பயன்பெற்று வருகிறார்கள். கிராம மக்களுக்கு மனவளக்கலை யோகாவை (SKY Yoga) இலவசமாக கற்றுக் கொடுக்கும். அருள்தந்தை அவர்களின் மகாசமாதி தினமான மார்ச் 28ம் தேதியை ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் வேதாத்திரிய வேள்வி தினமாக நடத்தி வருகிறோம். இவ்வருடம் வருகிற மார்ச் 28ம் தேதி வியாழக்கிழமை காலை 9.45 மணிக்கு நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மனவளக்கலை குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். வாழ்க வளமுடன்.....