மகான்களின் ஜீவ சமாதிகள்
2 videos • 7 views • by சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai ஜீவசமாதி என்பது ஜீவன் + சமம்+ஆதி. அதாவது ஆதியாகிய இறைவனிடம் இருந்த வந்த ஜீவனை சமன் செய்தல் என்று பொருள். ஞானிகள், யோகிகள், சித்தர்கள், சாதுக்கள் போன்றவர்கள் சித்தம் என்னும் அறிவைக் கொண்டு மனதை வெல்வதற்கு வாழ்வில் கடுமையான ஒழுக்கங்களையும், உயர்ந்த தவநெறிமுறைகளையும் தனது இரு கண்களினும் மேலாக பின்பற்றி வருகின்றனர். உடலையும் உன்னத்தையும் மாசின்றி பேணி காக்கின்றனர். அனலமோதும் ஜீவனை ஒரு நிலைப்படுத்தி தன்னையே உயர்ந்தவனாக ஆக்குவதே சித்தர் கலை. தன்னை அறிய தனக்கொரு கேடில்லை என்கிறார் திருமூலர். கடவுளை காண முயன்று கொண்டிருப்பவர்கள் பக்தர்கள். ஆனால் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள். யோக் என்றால் சமஸ்கிருத்தில் வழி என்று பொருள். இறைவனைக் காணும் வழியைக் கண்டவனே யோகி. இறைவனைப் பற்றிய சிந்தனையுடன் சின் அல்லது ஆதி போன்ற முத்திரையில் யோகி அமரும் ஆசிரமம்தான் "யோகாஸ்ரமம்" எனவும் கூறுகின்றனர். சமாதியடைவது என்பது முடிவு பெறும் ஒரு நிலையே அல்ல. ஞானிகள் தங்களுடைய ஆற்றலும் அருளும் என்றுமே இந்த அண்டத்தில் நிலைத்திருக்கச் செய்து விட்டு இறைவனோடு இரண்டறக் கலக்கின்றனர். சமாதிநிலையில் இருப்பதும் யோகநெறியின் உச்ச நிலை என உரைக்கப்படுகிறது. இவர்களின் உடல் மன இயக்கம் மட்டுமே நின்று போயிருக்குமே தவிர உயர் உடலை விட்டு பிரிவதில்லை என்கிறார் திருமூலர். இதை பதிவாக எளிமையாக போடுவதற்கு காரணம எந்த புகழ் பெற்ற கோவிலுக்கு சென்றாலும் ஜீவசமாதி விசாரித்தறிந்து அங்கு சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து நமது எண்ணங்களை மேம்படுத்திக் கொள்ளலாம். இந்த எண்ண உயர்வுக்கு நீங்கள் பெரிய தவ ஆற்றல் மிக்கவராகவோ, சித்தர்கள் போன்ற உணர்வுதளமோ தேவையில்லை. குருவே சரணம்,,,